
செங்கல்பட்டு மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை, 1,850 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், 788 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.இந்நிலையில், நேற்று, பல்லாவரம்- - 42--, தாம்பரம் - 37, செங்கல்பட்டு - 26, வண்டலுார் - 19, திருப்போரூர் - ஐந்து மற்றும் பிற மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேர், என, மொத்தம், 134 பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1,988 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Ad

திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு, 1,322ஆக இருந்தது. நேற்று, பூந்தமல்லி, ஆவடி, திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை, 1,386 ஆக உயர்ந்தது. இதில், 732 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.
காஞ்சிபுரத்தில் 18
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை, 514 பேருக்கு, கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்நிலையில்மேலும் படிக்க>>
Source:#Dinamalar #தினமலர்
Copyright: Dinamalar.com
ThankYou: Dinamalar
Shared: #Vir4_Tv #Vir4Tv Vir4. Tv
No comments:
Post a Comment